பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளான 17-வயது பள்ளி மாணவி மரணம்: நடந்தது என்ன?

 

பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளான 17-வயது பள்ளி மாணவி மரணம்: நடந்தது என்ன?

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 17-வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 17-வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் கொட்டாபட்டி அருகே உள்ள ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, வெளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அந்த சிறுமி, கடந்த 5-ஆம் தேதியன்று காலை இயற்கை உபாதைக்காக ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சதீஷ்(24) மற்றும் ரமேஷ்(23) என்ற இளைஞர்கள் மாணவியிடம் அத்துமீறியதோடு, சிறுமியின் வாயில் துணியை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மயக்கமடைந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பியுள்ளனர். அதன்பின் அங்கு வந்த ஊர்மக்கள், சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைப்பின் கண் விழித்த சிறுமி, நடந்தவற்றை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து கொட்டாபட்டி போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான இரண்டு காமுகர்களையும் கைது செய்யுமாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.