பாலியல் குற்றச்சாட்டு: பெண் பத்திரிகையாளர் மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு

 

பாலியல் குற்றச்சாட்டு: பெண் பத்திரிகையாளர் மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பெண் பத்திரிகையாளர் மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்

டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பெண் பத்திரிகையாளர் மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை மீ டூ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.

அவர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உள்ளிட்ட பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அப்பெண்கள் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அக்பர் மறுத்துள்ளார். புகார் எழுந்த போது, வெளிநாட்டில் இருந்த அக்பர் நாடு திரும்பியதும், தான் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடவில்லை. தன் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியல் நோக்கம் கொண்டவை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இந்நிலையில், தன் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ள பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அக்பர் தொடர்ந்துள்ளார்.