பாலத்தின் மேலிருந்து கயிறு கட்டி பிணத்தை எரிக்கும் கொடுமை | கண்கலங்க வைக்கும் வீடியோ

 

பாலத்தின் மேலிருந்து கயிறு கட்டி பிணத்தை எரிக்கும் கொடுமை | கண்கலங்க வைக்கும் வீடியோ

நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையை வாழ்வது தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்றால் இந்த சமூகம் இறந்த பிறகும் சும்மா விடுவதாயில்லை என்கிற கதையையாய் இருக்கிறது என்று கண்ணீர் விடுகிறார்கள் வாணியம்பாடியை அடுத்து உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த ஊர் மக்கள். 
வேலூர் வாணியம்பாடியை அடுத்து உள்ளது நாராயணபுரம்.

நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையை வாழ்வது தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்றால் இந்த சமூகம் இறந்த பிறகும் சும்மா விடுவதாயில்லை என்கிற கதையையாய் இருக்கிறது என்று கண்ணீர் விடுகிறார்கள் வாணியம்பாடியை அடுத்து உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த ஊர் மக்கள். 
வேலூர் வாணியம்பாடியை அடுத்து உள்ளது நாராயணபுரம். இந்த ஊர் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை நில ஆக்கிரமிப்பாளர்கள், அரசு அதிகாரிகளின் துணையுடன், சுடுகாட்டு பாதையையும் சேர்த்து மொத்தமாக ஆக்ரமித்துக் கொண்டார்கள். அந்த பகுதி முழுக்கவே ப்ளாட் போட்டு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் கன ஜோராக நடந்துக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை எரிப்பதற்கு மயான பூமிக்கு எடுத்துச் செல்வதற்கு வேறு பாதைகள் எதுவும் இல்லாததால், பாலாற்றின் பாலத்தின் மேல் சவ ஊர்வலம் சென்று, பாலத்தின் மீதிருந்த படியே கயிறு கட்டி, பிணத்தை பாலத்தின் கீழிறக்கி,அங்கிருந்து கொண்டுச் சென்று எரிக்கும் அவல நிலையைக் கண்டு அந்த பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

death

இது குறித்து அதிகாரிகளிடம் நிறைய முறைகள் புகார் அளித்தும், இதுவரையில் எந்த புகாருக்கும் பெயரளவில் கூட விசாரணை என்று எதுவுமே நடைப்பெறாதது தான் கொடுமையிலும் கொடுமை என்று புலம்புகிறார்கள் நாராயணபுரம் பகுதி மக்கள். 
புதுசா தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியாவாது ஏதாவது செய்வாரா என்கிற எதிர்ப்பார்ப்பில் தற்போது, அப்படியொரு இறுதி சடங்கு நடைபெறும் நிகழ்வை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.