பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 

பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள  3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்ததன் மூலம், அவர் சிறைக்கு செல்ல வேண்டி நிலையிலிருந்து தப்பித்துள்ளார். 

புதுடெல்லி: பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள  3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்ததன் மூலம், அவர் சிறைக்கு செல்ல வேண்டி நிலையிலிருந்து தப்பித்துள்ளார். 

பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு

balakrishna reddy

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாராயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக அப்போது பாஜகவிலிருந்த பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்குக் கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. 

3 ஆண்டுகள் சிறை

arrest

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி தனது விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது எம்.எல்.ஏ பதவியும் காலியானது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக இந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்குத் தடையில்லை

sc

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பாலகிருஷ்ண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று  விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள  3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் சிறைக்குச் செல்ல தேவையில்லை. அதே சமயம், வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தடையில்லை என்று கூறியுள்ளதன் மூலம்  வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பது தெளிவாகியுள்ளது. 

முன்னதாக சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் வாசிக்க: தன்னை விட சிறு வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் டிடி: யாரு தெரியுமா அந்த ஹீரோ?