பார்ப்பனர்களை ‘நாய்கள்’ என விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!! நாய் நன்றியுள்ளது அதான் அப்படி சொன்னேன் என விளக்கம்…

 

பார்ப்பனர்களை ‘நாய்கள்’ என விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!! நாய் நன்றியுள்ளது அதான் அப்படி சொன்னேன் என விளக்கம்…

பார்ப்பனர்களை ‘நாய்கள்’ என்று பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் .எஸ்.பாரதியின் பேச்சு இணையத்தில் வைரலாகிவருகிறது. தரம் தாழ்ந்து பேசப்பட்ட அந்த பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளார் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

பார்ப்பனர்களை ‘நாய்கள்’ என்று பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் .எஸ்.பாரதியின் பேச்சு இணையத்தில் வைரலாகிவருகிறது. தரம் தாழ்ந்து பேசப்பட்ட அந்த பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளார் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,   “கடந்த15 ஆம் தேதி வரை சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்டத்தில் நான் பேசியது குறித்து காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நோக்கத்தோடு திருத்தி பரப்பப்பட்டு வருகிறது. பெரியார் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள்  தலைவர்களை விமர்சிப்பதை பார்த்து மனம் தாங்காமல் ஒரு சில வார்த்தைகள் பேசினேன், அந்த வார்த்தைகள் யாருக்கும் மன வருத்தத்தையோ,  கஷ்டத்தையோ கொடுத்து இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நோக்கத்தோடு புண்படுத்தும் நோக்கத்தில் எந்த ஊடகத்தை பற்றியும் பேசவில்லை. பிச்சை என நான் குறிப்பிட்டது கொடை என்பது அர்த்தம். புரிந்து கொள்வதை பொறுத்து அர்த்தம் மாறும். நாய் என்பது நன்றி உள்ள பிராணி” என விளக்கமளித்துள்ளார் .

HRaja

கடந்த 15 ஆம் தேதி விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,  “கண்ட கண்ட நாயெல்லாம் திமுகவைப் பற்றி பேசுகிறது. எச். ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம் இருக்கிறது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு  உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது,டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது” என பேசியிருந்தார்.