பார்சலை திருடிவிட்டு மன்னிப்புக்கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்!

 

பார்சலை திருடிவிட்டு மன்னிப்புக்கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்!

அமெரிக்காவில் ஆளில்லாத வீட்டிற்கு வந்த பார்சலை திருடிவிட்டு, அதற்கு பதில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடனின் செயல் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது, 

அமெரிக்காவில் ஆளில்லாத வீட்டிற்கு வந்த பார்சலை திருடிவிட்டு, அதற்கு பதில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடனின் செயல் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது, 

மின்னசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஹிலாரி ஸ்மித் என்ற பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர் தனது முதலாளிக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுப்பதற்காக ஆன்லைனில் செல்போன் சார்ஜர் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஆர்டர் டெலிவரி ஆகிவிட்டதாக ஹிலாரிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. 

Letter

வேலையிலிருந்து வீட்டிற்கு சென்ற ஹிலாரி அவரது வாசலில் பார்சலை தேடியுள்ளார். ஆனால் பார்சலுக்கு பதில் அங்கு ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில்,  “உங்களுடைய பொருளைத் திருட எனக்கு வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி! இப்படிக்கு உங்களுடைய பொருளின் புதிய உரிமையாளர்” என்று எழுதப்பட்டிருந்தது.