பாரிஸின் அடையாளமா‌ன ஈஃபிள் கோபுரம்!

 

பாரிஸின் அடையாளமா‌ன ஈஃபிள் கோபுரம்!

ஈஃபிள் டவரை அறியாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. அந்த அளவுக்கு புகழ்பெற்ற ஈபிள் டவர் முதன்முதலில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட நாள் இன்று… இன்றைய தினத்தில் உயரமான உலக அதிசயமான ஈபிள் டவரின் சிறப்பம்சங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்‌

ஈஃபிள் டவரை அறியாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. அந்த அளவுக்கு புகழ்பெற்ற ஈபிள் டவர் முதன்முதலில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட நாள் இன்று… இன்றைய தினத்தில் உயரமான உலக அதிசயமான ஈபிள் டவரின் சிறப்பம்சங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்‌.. 

effiel tower

பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரபஞ்ச கண்காட்சி விழாவிற்கான நுழைவு வாயில் வளைவாக 1889ம் ஆண்டில் கட்டப்பட்டதுதான்  ஈஃபிள் கோபுரம்.  வடிமைப்பாளர் ஈஃபிளின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த கோபுரம் 986 அடி உயரம் கொண்டது. 300 பணியாளர்களின் 2 ஆண்டு உழைப்பு பின்னர் வடிவம் பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் 18 ஆயிரத்து 38 உருக்கு துண்டுகள் 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி இணைக்கப்பட்டிருக்கிறது.

effiel tower

உலகின் மிகச் சிறந்த கட்டகலைகளுள் ஒன்றாக கருதப்படும் இந்த கோபுரத்தை நேரில் பார்க்க ஆண்டுக்கு 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பாரிஸிற்கான அடையாள குறியீடாகவே மாறிவிட்ட ஈஃபிள் கோபுரம் 1889ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு இதே நாளில்தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.