பாராளுமன்ற தேர்தல்: 300 தொகுதிகளில் தாமரை மலரும்; அமித்ஷா நம்பிக்கை

 

பாராளுமன்ற தேர்தல்: 300 தொகுதிகளில் தாமரை மலரும்; அமித்ஷா நம்பிக்கை

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அகர்தலா: பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்தவித சவாலும் இல்லை என்றும் நாங்கள் 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் எளிதில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 

அதேபோல், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 50 இடங்கள் வரை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்த அமித்ஷா, அனைத்து மாநில பாஜக தலைமையிடமும் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், இந்த தேர்தலில் வளர்ச்சி, பாதுகாப்பு, நாட்டின் சுயமரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய இருப்பதாகவும் அமித்ஷா கூறினார்.