“பாம்ப பச்சையா தின்னு கொரனாச்சீக்க சீனாக்காரங்க இழுத்து விட்டுட்டு உட்கார்ந்துக்கிட்டீங்க” மூதாட்டியின் வைரல் வீடியோ!

 

“பாம்ப பச்சையா தின்னு கொரனாச்சீக்க சீனாக்காரங்க இழுத்து விட்டுட்டு உட்கார்ந்துக்கிட்டீங்க” மூதாட்டியின் வைரல் வீடியோ!

இதனால் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளனர். 

 சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 7லட்சத்து 84ஆயிரத்து 716  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளனர். 

ttn

இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொரோனா குறித்தும், அதனால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது  குறித்தும் ஆதங்கமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், கொரனாச்சீக்கு வரவைச்சிட்டாங்க வெளிநாட்டுல. நாங்களெல்லாம் நல்ல கஞ்சி குடிக்கிறோம். நீங்க பாம்பு கறியை வேகவைச்சு சாப்பிடமா இதை வரவைச்சிட்டீங்க.

 

 ஒரு வண்டியும் இல்ல, கடைக்கு போகமுடியல இந்த ஊருல நாங்க எப்படி பிழைக்குறது.  சீனாக்காரங்க இழுத்து விட்டுட்டு உட்கார்ந்துக்கிட்டீங்க. எங்களால வெளியே போக முடியல.  ஏம்பா பாம்ப, தவளைய பச்சையா திங்குற. வேண்டாம்ப்பா அதெல்லாம். வேக வச்சு தின்னு. கொரனாச்சீக்கு எங்க தமிழ் நாட்டுக்கு வராது..வராது..வராது..நாங்க நல்ல கஞ்சி நல்ல சோறு நாசாப்பிட்டுட்டு  நாாகரிகமா இருக்கோம்’ என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.