பாம்பை கண்டு படையே நடுங்குவதால் பாம்பு பலசாலியா? திருமாவளவன் கேள்வி

 

பாம்பை கண்டு படையே நடுங்குவதால் பாம்பு பலசாலியா? திருமாவளவன் கேள்வி

பாம்பை கண்டு படையே நடுங்குவதால் பாம்பு பலசாலி ஆகிவிடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: பாம்பை கண்டு படையே நடுங்குவதால் பாம்பு பலசாலி ஆகிவிடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 10 பேர் சேர்ந்து கொண்டு ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் பாஜகதான் பலசாலி என கூறும் ரஜினி எதிர்க்கட்சிகளை கிண்டலடிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல. பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும். விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம் என்றார்.