பாம்பை ஏவிவிட்டு 60 சவரன் கொள்ளை ! பாம்புக்கு பயந்தவருக்கு நேர்ந்த கதி !

 

பாம்பை ஏவிவிட்டு 60 சவரன் கொள்ளை ! பாம்புக்கு பயந்தவருக்கு நேர்ந்த கதி !

பாம்புக்கு பயந்து பக்கத்து வீட்டி தூங்கியவரின் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

பாம்புக்கு பயந்து பக்கத்து வீட்டி தூங்கியவரின் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே  காட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார் மரியசெல்வம் என்ற பெண். உசிலம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றும் மரியசெல்வம், இவரது மகள் கல்லூரியிலிருந்து சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மரிய செல்வம் வீட்டில் பாம்பு நுழைந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பாம்பு புகுந்ததால் பயந்து போன மரிய செல்வம் பக்கத்து வீட்டில் தூங்கியுள்ளார். இதனைப் தெரிந்து கொண்ட சில மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.காலையில் வீடு திரும்பிய மரியசெல்வம் தனது வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளைய போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

mariaselvam

பின்பு, இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை மரியசெல்வம் வீட்டில் கொள்ளையடிக்கத்தான் மர்மந நபர்கள் முதலில் பாம்பை ஏவிவிட்டு பயமுறுத்தினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மகளிர் திருமணத்திற்காக சிறுக சிறுக வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து வைத்த நகைகள் திருடுபோனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் மரியசெல்வம். ஒரு நாள் பக்கத்து வீட்டில் தூங்கிய மரியசெல்வம் கொள்ளை சம்பவத்தால் நிரந்தரமாக உறக்கத்தை இழந்துள்ளார்.