பாம்பு கடித்து இறந்த 3 வயது சிறுவன் : மருத்துவர் அலட்சியத்தால் பறிபோன உயிர்?!

 

பாம்பு கடித்து இறந்த 3 வயது சிறுவன் : மருத்துவர் அலட்சியத்தால் பறிபோன உயிர்?!

கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா, அனு என்ற இரண்டு பெண் குழந்தைகளும், அஜய் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.

போச்சம்பள்ளி அடுத்த பழனியாண்டவர் நகர் பகுதியை சேர்ந்த சத்தியராஜ்-சந்திரலேகா தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா, அனு என்ற இரண்டு பெண் குழந்தைகளும், அஜய் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மகன் அஜய் வெளியில் விளையாடி கொண்டிருக்கும் போது அவனை பாம்பு கடித்துள்ளது. இதுகுறிது குழந்தை தனது காலை காண்பித்து தாயிடம் சொல்ல ,உடனே அஜய்யை தூக்கி கொண்டு உறவினர்கள் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

gg

ஆனால் அங்கு மருத்துவர் இல்லை. இதனால் நீண்ட நேரம் காத்து கிடந்த பெற்றோர் மருத்துவர் வந்ததும் விவரத்தை கூறியுள்ளனர். ஆனால் மருத்துவரோ அதெல்லாம் ஒன்றும் கடிக்கவில்லை. அவன் நன்றாக தான் இருக்கிறான் என்று கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தனர்.

ஆனால் வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களில் குழந்தைக்கு கால் வீங்கி மயக்க நிலைக்கு சென்றுள்ளான். இதையடுத்து மீண்டும் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இங்கு சிகிச்சை அளிக்க முடியாது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர் சொல்ல, 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.  

tt

இதுகுறித்து இறந்த குழந்தையின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து அரசு மருத்துவர் அஜாக்கிரதையால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.