பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யுங்கள்… உ.பி டி.ஜி.பி கடிதம்!

 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யுங்கள்… உ.பி டி.ஜி.பி கடிதம்!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய வேண்டும் என்று உ.பி போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

dgp

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் அதிக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இவற்றுக்குக் காரணம் பிரபல இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்று பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

caa

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில டி.ஜி.பி ஓபி சிங் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “டிசம்பர் 19ம் தேதி நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சிதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. எனவே, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.