பாபா கோயிலில் பிரசாதத்துக்கு பதில் பலாத்காரம் -ஆசிரமத்தின் அறையில் பெண் பக்தைகளை அடைத்த பூசாரி..  

 

பாபா கோயிலில் பிரசாதத்துக்கு பதில் பலாத்காரம் -ஆசிரமத்தின் அறையில் பெண் பக்தைகளை அடைத்த பூசாரி..  

இன்று வரும் குற்ற வழக்குகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. சமீபத்தில் வந்துள்ள, பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பாபாவுக்கு சேவை செய்ய வந்த இரண்டு டீனேஜ் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் . குற்றம் சாட்டப்பட்ட பாபா கோயில் பூசாரிகள் அந்த  சகோதரிகளை, ஒரு பிரசாத  அறையில் அடைத்து வைத்து,  இருவரையும் மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வரும் குற்ற வழக்குகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. சமீபத்தில் வந்துள்ள, பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பாபாவுக்கு சேவை செய்ய வந்த இரண்டு டீனேஜ் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் . குற்றம் சாட்டப்பட்ட பாபா கோயில் பூசாரிகள் அந்த  சகோதரிகளை, ஒரு பிரசாத அறையில் அடைத்து வைத்து,  இருவரையும் மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள், இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால், அவர்கள் அவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்கள்.

girl  abuse

இந்த பயம் காரணமாக, அந்த சகோதரிகள்  யாரிடமும் சொல்லவில்லை, அவர்கள் பயப்படுவதைக் கண்ட, பூசாரிகள்  அவர்களை ஆசிரமத்திலிருந்து வெளியேற அனுமதித்தனர். பிறகு வெளியே வந்த  டீனேஜ்  பெண்கள்  இப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், மேலும் அவர்கள் அளித்த புகாரின் பேரில், அந்த பெண்களுக்கு சிவில் மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது போலீஸ் நடவடிக்கையில் , குற்றம் சாட்டப்பட்ட பாபா பூசாரிகள் நேற்று இரவு பிடிபட்டார்கள்,மேலும் அந்த பாபா பூசாரிகள் மீது புதன்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆசிரமத்தின் உரிமையாளர் லக்ஷானந்த் போலீசில் சிக்கவில்லை .  போலீசார் இன்னும் அவரைத் தேடுகிறார்கள். மஹிலா காவல் நிலைய எஸ்.எச்.ஓ நேஹா சவுகான் கூறுகையில், “சகோதரிகள் இந்த விஷயத்தை ராய்புரானியின் ஒரு ஆசிரமத்தில்  புகார் செய்துள்ளனர். அவர்கள்  தங்கள்  குடும்பத்தினருடன் இமாச்சலத்தின் பட்டியில் வசிக்கிறார்கள். ஜனவரி 25 அன்று, அவர்கள் இருவரும் தங்கள் சகோதரர்களுடன்  லக்ஷியானந்தாவின் ஆசிரமத்திற்கு வந்தனர். கோயிலில் பூசாரிகள் சகோதரிகளை ஒரு தனி அறையிலும், அவர்களது சகோதரர்களை மற்றொரு தனி அறையிலும் வைத்திருந்தார்கள். இதன் பின்னர், அந்த பாபா பூசாரிகள் இரு சகோதரிகளையும் மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். 

மகள்களின் மோசமான நிலையை கண்டறிந்த குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை பாபா பூசாரிகள் மீது புகார் அளிக்க ராய்புரானி காவல் நிலையத்துக்கு வந்தனர், ஆனால் அங்கிருந்து அவர்கள் பெண்கள் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது