பாபர் மசூதி தீர்ப்பு நீதியை நிலைநாட்டாமல், சமரச முயற்சியாகவே இருக்கிறது… திருமாவளவன் அறிக்கை!

 

 பாபர் மசூதி தீர்ப்பு நீதியை நிலைநாட்டாமல், சமரச முயற்சியாகவே இருக்கிறது… திருமாவளவன் அறிக்கை!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிபடையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரியவில்லை என்று தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டும் அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல் சமரச முயற்சியாகவே இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிபடையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரியவில்லை என்று தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டும் அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல் சமரச முயற்சியாகவே இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

thirumavallavan

மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவ கூடாது என்றும், இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுவதாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல்  தலையீட்டின்  வெளிப்பாடகவே தெரிகிறது என்றும் அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.