பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுகட்டு… க்ரைம் ரேட்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி ஏரியா..!

 

பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுகட்டு… க்ரைம் ரேட்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி ஏரியா..!

சென்னை ரவுடி உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி கால்களை முறித்துக் கொண்டுள்ளனர். இதனால் கிரைம் ரேட் குறைந்து இருக்கிறது.

சேலம் நகர போலீசில் கடந்த 3 ஆண்டுக்கு முன் கமிஷனராக ஒருவர் இருந்தபோது, ரவுடிகளின் கால் முறிவு ஆபரேஷன் மிக சக்சஸாக நடந்தது. 

இதை பின்பற்றி மாநிலம் முழுவதும் தற்போது ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆனால், சேலம் நகரில் அந்த பாணி கைவிட்டு போய் விட்டது. இருந்தாலும் சேலம் மாவட்ட போலீசார், கால் முறிவு ஆபரேஷனை  கையில் எடுத்து இருக்கிறார்கள். கடந்த 3 மாதத்தில் 8 ரவுடிகள், ஆங்காங்கே விபத்தில் சிக்கி கால்களை முறித்துக் கொண்டுள்ளனர் என கணக்கிட்டுள்ளனர்.rowdys

 நேற்று முன்தினம் கூட, சென்னை ரவுடி உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி கால்களை முறித்துக் கொண்டுள்ளனர். இதனால் கிரைம் ரேட் குறைந்து இருக்கிறது.  அதனால் கால் முறிவு ஆபரேஷனுக்கு உயரதிகாரிகள் பர்மிஷன் தரணும்னு கேட்டு வருகிறார்களாம். ஆனால், உயரதிகாரிகள் கோட்டையை நோக்கி கையை காட்டுறார்களாம். இதனால், போலீசார் வேதனையுடன் எல்லாத்துக்குமா கோட்டையை கை காட்டுவது என்று புலம்புகிறார்களாம்.