பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண்… விழுப்புரத்தில் பரபரப்பு!

 

பாதி எரிந்த  நிலையில் சடலமாக கிடந்த பெண்… விழுப்புரத்தில் பரபரப்பு!

முதல் மனைவி தான்  இந்திரா. இரண்டாவது மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார். 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுதாகர் நகரில் வசிப்பவர் இந்திரா. இவரது கணவர் நடராஜன். ஓய்வு  பெற்ற  ஆசிரியரான இவரின் முதல் மனைவி தான்  இந்திரா. இரண்டாவது மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார். 

ttn

இந்நிலையில் நடராஜன் – இந்திரா தம்பதியின் மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கல்லூரியில் படிக்கும்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனால்  விழுப்புரத்தில்  இந்திராவும் நடராஜனும் மட்டுமே வசித்து வந்துள்ளனர். 

இதையடுத்து நேற்று இரண்டாவது மனைவியை பார்க்க நடராஜன் திருக்கோவிலூர் சென்றுள்ளார். இதை தொடர்ந்து இன்று காலை  அவர்   வீடு திரும்பிய நிலையில் இந்திரா ரத்தக் காயங்களுடன் உடலின் ஒருபகுதி எரிந்த நிலையில்  சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜன், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ttn

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு  வந்த போலீசார் இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கணவர் நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.