பாதிரியார்களின் அத்துமீறிய பாலியல் சீண்டல்… கேரளாவில் இன்று மீண்டும் ஒரு கன்னியாஸ்திரி மர்ம மரணம்!

 

பாதிரியார்களின் அத்துமீறிய பாலியல் சீண்டல்… கேரளாவில் இன்று மீண்டும் ஒரு கன்னியாஸ்திரி மர்ம மரணம்!

திருவல்லா பாலியேக்கர கன்னியாஸ்திரி மடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த திவ்யா டி ஜோய் என்ற 21 வயதே ஆன இளம்பெண் அங்குள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில்  திருவல்லா அருகே உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னியாஸ்திரிக்கான பயிற்சி பெற்று வந்த திவ்யா என்ற 21 வயது பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடல் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளது.மலபள்ளி அருகே உள்ள சுங்காபரா கிராமத்தை சேர்ந்த திவ்யாவின் தந்தை துணை ராணுவப் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த வியாழக்கிழமை காலை வகுப்பில் இருந்த திவ்யா பதினொன்றரை மணியளவில் வெளியே சென்றார். சுமார் 15 நிமிடங்களுக்குப் பின் கிணற்றில் கனமான பொருள் விழுந்த சத்தம் கேட்டு அனைவரும் அந்த இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது திவ்யா கிணற்றில் பிணமாக மிதந்துகொண்டிருந்தார். பிரேதபரிசோதனைக்கு பின் திவ்யாவின் உடல் அவரது தாயார் மற்றும் இரு சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. திவ்யாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிரியார்களின் பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தியதால் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூஸி களப்புரைக்கல் தன்னுடைய முகநூல் பதிவில், “உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்காவது நீதி கிடைக்குமா? இரவில் ஏதேனும் ஒரு பாதிரியின் படுக்கை அறையில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பயிற்சி கன்னியாஸ்திரிகள் மறுநாள் கிணற்றிலோ, தண்ணீர் தொட்டியிலோ பிணமாக மீட்கப்படுவது என்றுதான் தீரும். 

கேரளா கன்னியாஸ்திரி

1987. கன்னியாஸ்திரி மடத்தின் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த சிஸ்டர் லிண்டா.

1990. கொல்லம் தில்லேரியில் கொல்லப்பட்ட சிஸ்டர் மஃக்தேல.

1992. ஃபயஸ் டென்ஸ் கான்வென்ட் கிணற்றில் இறந்து கிடந்த சிஸ்டர் அபயா.

1993. கொல்லம் அருகே கொட்டியத்தில் இறந்த நிலையில் கிடந்த சிஸ்டர் மெர்சி.

1994. புல்பள்ளி மரக்காவு கான்வென்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிஸ்டர் ஆனிஸ்.

1998. கோட்டயம் பாலா கான்வென்டில் கொல்லப்பட்ட சிஸ்டர் பின்ஸி.

1998. கோழிக்கோடு அருகே கான்வென்ட் கிணற்றில் பிணமாக மிதந்த சிஸ்டர் ஜ்யோதீஸ்.

2000. பாலா ஸ்னேஹகிரி கான்வென்டில் கொல்லப்பட்ட சிஸ்டர் போல்ஸி.

2006. ரான்னி அருகே மடத்தில் கொல்லப்பட்ட சிஸ்டர் ஆன்சி வர்கீஸ்.

2008. கொல்லம் அருகே கன்னியாஸ்திரி மடத்தில் கொல்லப்பட்ட சிஸ்டர் அனுபா மரியா.

2011. திருவனந்தபுரம் அருகே நீர்நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிஸ்டர் மேரி ஆன்சி.

2015. பாலா அருகே கான்வென்ட்டில் தலையில் காயத்தோடு இறந்து கிடந்த சிஸ்டர் அமலா.

2018. கொல்லம் பத்தனாபுரத்தில் மவுண்ட் தாபூர் கான்வென்ட் கிணற்றில் பிணமாக கிடந்த சிஸ்டர் சூசன் மாத்யூ.

நேற்று இதோ திவ்யா டி ஜோய்..

கிணறு

இதில் ஒரு கொலைக்கும் சாட்சியில்லை, இதுவரை யாரும் தண்டிக்கபடவுமில்லை, வழக்கு தொடுக்கப்பட்டாலும் சபைக்கு கேவலம் என கூறி இறந்த கன்னியாஸ்திரி குடும்பத்துக்கு பணத்தை கொடுத்து வாயடைக்க வைப்பதும், செய்தி சானல்களில் ஒரு நாள் செய்தியாக வந்து ஒடுங்கிவிடுவதுமே வாடிக்கையான நிகழ்வு. மாறாக இம்மாதிரி ஒரு மர்ம மரணம் ஹிந்து ஆசிரமத்தில் நிகழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன். இந்த டிவி சானல் மாமாக்கள் வானுக்கும் பூமிக்குமாய் குதித்திருக்க மாட்டான்கள்?? பெண்ணுரிமை போராளிகள், எழுத்தாளர்கள், கலாச்சார காவலர்கள்னு கிளம்பி ஆசிரமத்தை எரிச்சிருக்க மாட்டானுங்க?? ஆனால் மிஷனரி மரணங்கள்னு தெரிஞ்சா இவனுங்க சப்தநாடியும் ஒடுங்கிவிடும். மீறி வாயை திறந்தால் பணத்தால் மூடி விடுவார்கள்” என தனது ஆதங்கத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.