பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயண அனுபவங்களைச் சொல்லுங்க… பரிசுகளை அள்ளுங்க!

 

பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயண அனுபவங்களைச் சொல்லுங்க… பரிசுகளை அள்ளுங்க!

இந்த வருஷ தீபாவளிக்கான ரயில் டிக்கெட்கள் அறிவிக்கப்பட்ட சில நொடிகளிலேயே தீர்ந்து விட்டது. ஒவ்வொரு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் தென் தமிழகத்திற்கான ரயில் டிக்கெட் கிடைக்காமல் புலம்பிக் கொண்டே தான் மக்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில், மதுரை வரையில் செல்லும் மக்களுடன் பயணத்தில் இன்றியமையாத ரயிலாக இருக்கிறது பாண்டியன் எக்ஸ்பிரஸ்.

இந்த வருஷ தீபாவளிக்கான ரயில் டிக்கெட்கள் அறிவிக்கப்பட்ட சில நொடிகளிலேயே தீர்ந்து விட்டது. ஒவ்வொரு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் தென் தமிழகத்திற்கான ரயில் டிக்கெட் கிடைக்காமல் புலம்பிக் கொண்டே தான் மக்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில், மதுரை வரையில் செல்லும் மக்களுடன் பயணத்தில் இன்றியமையாத ரயிலாக இருக்கிறது பாண்டியன் எக்ஸ்பிரஸ். இந்த வருடம் பாண்டியன் விரைவு ரயில் பொன் விழாவை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

rail

இந்த பொன் விழாவினை கொண்டாடும் வகையில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த உங்களின் மறக்க முடியாத சுவாரஸ்யமான அனுபவங்களை கட்டுரை வடிவில் சிறப்பாக எழுதி அனுப்புங்கள். சிறந்த மூன்று கட்டுரையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. ஆயிரக்கணக்கில் வந்திருந்த கட்டுரைகளில், சிறந்த கட்டுரையாளர்கள் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று (01.10.2019) இரவு  08.00 மணிக்கு மேல் இரவு 08.30  மணிக்கு முன்பாக  மதுரை ரயில் நிலையம் நடைமேடை ஒன்றில் நடைபெறுகிறது.