பாட்டி வழியில் ‘பஸ் கரோ’ சொல்லி போட்டோகிராபர்களை அதிர வைத்த ஜூனியர் ஐஸ் !

 

பாட்டி வழியில் ‘பஸ் கரோ’ சொல்லி போட்டோகிராபர்களை அதிர வைத்த ஜூனியர் ஐஸ் !

பிரபலத் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்து வருகின்றது.

பிரபலத் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்து வருகின்றது.

ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பை ஜியோ சென்டர் அரங்கில் திருவிழா போல மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மும்பை சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் உலக அழகியும் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன்  மற்றும் மகள் ஆராத்யா பச்சனுடன் வருகை தந்தார். அப்போது வழக்கம் போல, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.

அப்போது ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் செய்த குறும்புகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. புகைப்படம் எடுப்பதை விரும்பாத ஆராத்யா விரைந்து வருமாறு பெற்றோரை துரிதப்படுத்தியதோடு மட்டுமின்றி, கிளம்புகையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் நன்றி சொல்லும் போது ” போதும்” என்று பொருள் தரும் சொல்லான  ” Bas Karo” என்று கூறியிருக்கிறார். அதைக் கண்டு ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் சிரித்துக் கொண்டே அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆராத்யா பச்சனின் இந்தக் காணொளியை காணும் போது, அவர் அப்படியே அவரது பாட்டியும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயா பச்சனும் பொது இடங்களில் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.