பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைந்த ஆசிரியர்!

 

பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைந்த ஆசிரியர்!

தெலங்கானாவில் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெகபூபாபாத் மாவட்டத்திலுள்ள விஜய் சிங் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். மாணவர்கள் மத்தியில் நன்கு உரையாடிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு நாற்காலையில் அமர்ந்தபடி சாய்ந்தபடி அமர்ந்தார்.

Teacher

இதைப்பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மயங்கி கிடந்த ஆசிரியரின் அருகில் சென்று அவரை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் வகுப்பறையிலிருந்து ஓடிச்சென்று பிற ஆசிரியரை அழைத்துவந்தனர். மற்ற ஆசிரியர்கள் வந்து பார்த்தபோது மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழந்தது தெரியவந்தது. பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதே ஆசிரியர் உயிரிழந்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை என்று மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.