பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

 

பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம்: சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த்  உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக்கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சராகப் பதவி வகித்தவர். 

harassment

இந்நிலையில் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக்கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர்  பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  மேலும் அந்த வீடியோவில் சிறுமிகள் மற்றும் பல மாணவிகளை  பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளதோடு, இதை வெளியில் கூறினால் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். 

CHINAMAYANAD

இதையடுத்து புகார் கூறிய மாணவி கடந்த 3 நாட்களாக மாயமான நிலையில், சுவாமி சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.