பாஜக தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்துகின்றனர்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

 

பாஜக தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்துகின்றனர்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தில் பாஜக தொண்டர்கல் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்துகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் பாஜக தொண்டர்கல் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்துகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் நேற்று தரிசனம் செய்தனர். இதனால் இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயன் வாகனத்தையும் அவர்கள் தாக்குவதற்கு முயற்சி செய்தனர். அதுமட்டுமின்றி சென்னையில் இருக்கும் கேரள விருந்தினர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில்,சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபரிமலையில் கடந்த 3 மாதங்களில் 7 முழு அடைப்பு போராட்டங்கள் நடந்துள்ளது. முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பாஜக தொண்டர்கள் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்துகின்றனர். பெண்கள் தரிசனம் செய்ய உண்மையான பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.