பாஜக கேரளாவை ஆள முடியாது: பாஜக எம்எல்ஏ ராஜகோபால்

 

பாஜக கேரளாவை ஆள முடியாது: பாஜக எம்எல்ஏ ராஜகோபால்

பாஜகவால் கேரளாவை ஆள முடியாது என கேரளாவின் ஒரே பாஜக எம்எல்ஏவான ஓ ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

திருவாங்கூர்: பாஜகவால் கேரளாவை ஆள முடியாது என கேரளாவின் ஒரே பாஜக எம்எல்ஏவான ஓ ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில சட்டமன்றத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேச்சு எழுந்தபோது அவர் இந்தக் கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர், பாஜக இதுவரை கேரளாவை ஆட்சி செய்ததில்லை. இதுவரை அதிகாரத்தில் இல்லாத பாஜக, எதிர்காலத்திலும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். ஆனால், கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவை சேர்ந்தவர்கள் வேறு இடங்களுக்கு வேலை தேடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ராஜகோபாலின் இந்தக் கருத்து குறித்து கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, ராஜகோபால் கருத்து பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால் இதுபற்றி நான் பேச விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார். கேரளாவில் தங்கள் ஆட்சியை நிறுவ பாஜக தீவிரமாக முயன்று வரும் வேளையில், ராஜகோபால் இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.