பாஜக எனும் தேசிய வாதத்தை வீழ்த்த முடியும் – ப.சிதம்பரம் அதிரடி

 

பாஜக எனும் தேசிய வாதத்தை வீழ்த்த முடியும் – ப.சிதம்பரம் அதிரடி

தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என காங்கிரஸ் தொண்டர்கள் நம்ப வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

Chidambaram

ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கங்களை அவரது குடும்ப உறுப்பினர்கள் இயக்கிவருகின்றனர். இந்நிலையில் ப. சிதம்பரத்தின் கருத்துக்களை கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுவருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது நாட்டு பிரச்னைகளுக்கு சிறையிலிருந்தே கருத்து சொல்லும் ப.சிதம்பரம் இந்த முறை பாஜகவின் தேர்தல் வெற்றிக்குறித்து ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என காங்கிரஸ் தொண்டர்கள் நம்ப வேண்டும். அமைதியான நாட்டுப்பற்றால் பலம் வாய்ந்த தேசிய வாதத்தை வீழ்த்த முடியும். மக்கள் வெகுண்டு எழுந்தால் அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது” என பதிவிட்டுள்ளார்.