பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்குப்பதிவு!

 

பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்குப்பதிவு!

இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளார். 

இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட சுமார் 422 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை சிலர் மதப்பிரச்னையாக்கி வருகிறார்கள். 

ttn

இந்நிலையில் பிரபல பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் சமூகவலைதளங்களில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில்  கொரொனா தொற்றையும் இஸ்லாமிய அமைப்புக்களையும்  ஒன்றிணைத்து மாரிதாஸ் இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதை கண்ட பலர், மாரிதாஸ் மதப்பிரச்சனையை தூண்டிவிடுவதாக கருத்து கூறிவந்தனர். 

tt

இதையடுத்து இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு சிலர் கோர்டும் இல்ல.. மீன் கடையும் இல்ல.. தலைவன் ஜாமீனுக்கு எங்க போவானு தெரியலையே.. என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.