பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக போர் துவங்கி இருக்கிறேன் – பெரம்பலூரில் ஸ்டாலின் பேச்சு

 

பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக போர் துவங்கி இருக்கிறேன் – பெரம்பலூரில் ஸ்டாலின் பேச்சு

பாஜக, அதிமுக அரசுகளை வீழ்த்த ‘ஜனநாயக அறப்போர்’ என்ற தலைப்பில் பெரம்பலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்: பாஜக, அதிமுக அரசுகளை வீழ்த்த ‘ஜனநாயக அறப்போர்’ என்ற தலைப்பில் பெரம்பலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாள் 120 கோடி மக்களை பிரதமர் மோடி முட்டாளாக்கிய தினம் இன்று. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம், ஊழல் ஒழியும் என பிரதமர் மோடி கூறினார். 2 ஆண்டுகள் முடிந்ததும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம் இப்போது இல்லையா? 

இதுவரை 95 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அதெல்லாம் யார் வீட்டு பணம்? நீரவ் மோடி, லலித் மோடியை காப்பாற்றியது தான் பிரதமர் மோடியின் சாதனை. பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக போர் துவங்கி இருக்கிறேன்.” என பேசியுள்ளார்.