பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை: ராஜ்நாத்சிங் நம்பிக்கை

 

பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை: ராஜ்நாத்சிங் நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நொய்டா: நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட ஏராளமான எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டம் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், வரும் தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கிறது எனவும்  எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை. பாஜகவை பார்த்து பயந்துபோனதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்றார்.