பாஜகவிடம் பதுங்கி பம்மும் திமுக… சபரீசனுக்கு வந்த போன் கால்… ஆடிப்போன மு.க.ஸ்டாலின்..!
ஸ்டாலின் குடும்பத்திற்கும் நெருக்கமான தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் பேசி இருக்கிறார்.
ஹிந்தி எதிர்ப்பு போரட்டத்தை மு.க.ஸ்டாலின் வாபஸ் வாங்கியதன் பின்னணி இப்போது வெளியாகி இருக்கிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தந்த ஆலோசனையைக் கேட்டு தான் தி.மு.க., தரப்பபில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். போராட்டத்தை அறிவித்த ஸ்டாலினை, தமிழக ஆளுநர் அழைத்து பேசிய பிறகு தான் ‘போராட்டம் வாபஸ்’ என ஸ்டாலின் அறிவித்தார். அதுக்கு முன்னாடியே, மத்திய அரசுக்கும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் நெருக்கமான தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் பேசி இருக்கிறார்.
”நீங்க போராட்டத்தை ஆரம்பித்து வைத்தால் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதிக்கும்… அதனால், மத்திய அரசின் எதிர்ப்பை, வீணாக சம்பாதிக்க வேண்டாம்’ என நாசுக்காக சொல்லி இருக்கிறார். இதுதான் போராட்டத்தை வாபஸ் வாங்க முக்கிய காரணம் என்கிறார்கள்.