பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் மேட்டூர் அணை.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !

 

பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் மேட்டூர் அணை.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.ஒரே ஆண்டில் 4 முறை மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது இதுவே முதன் முறையாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

ttn

இந்த அணையின் 16 கண் மதகுகள் அருகே இருக்கும் நீர் அடர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த நீர் அந்த பகுதியில் உள்ள குட்டைகளுக்குச் செல்வதால் அங்கு இருக்கும் மீன்கள் செத்து மிதந்து கிடந்தன.  அதுமட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த நீரை ஆய்வு மேற்கொண்டு இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று மக்கள் கடந்த 4 ஆம் தேதி கோரிக்கை விடுத்தனர். 

ttn

10 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,  அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்திய படி, துர்நாற்றம் வீசும் அந்த மதகுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.