பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது

 

பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக இணைகிறது

பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை மூன்றும் விரைவில் ஒன்றாக இணைய உள்ளது.

டெல்லி: பாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை மூன்றும் விரைவில் ஒன்றாக இணைய உள்ளது.

நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் காரணமாக கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில், மேற்கண்ட மூன்று வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இணைப்புக்கான ஒப்புதலை விரைவில் மத்திய அரசு வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.