பாக்ஸர் படத்தில் களமிறங்கும் ரியல் பாக்ஸர்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் “பாக்ஸர்” படத்தில் இறுதிச் சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் “பாக்ஸர்” படத்தில் இறுதிச் சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருப்பார்.அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்பின் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு, ஹிந்தியில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார் ரித்திகா சிங்.
Absolutely delighted @ritika_offl plays the lead in my movie #boxer @MathiyalaganV9 @EtceteraEntert1 @ganesh_madan @DoneChannel1 @SureshChandraa @ProRekha pic.twitter.com/OsdUl0zLnT
— Vivek (@Vivek_Director) February 11, 2019
இந்நிலையில் திரைப்பட வாய்ப்பு இன்றி இருந்த ரித்திகா சிங்க் தற்போது விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துத்திருந்தார். எக்ஸட்ரா எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.