பாக்கெட்  பால் குடிக்கிறதுல இத்தனை ஆபத்துக்களா… மக்களே உஷா….ர்!

 

பாக்கெட்  பால் குடிக்கிறதுல இத்தனை ஆபத்துக்களா… மக்களே உஷா….ர்!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பாக்கெட் பாலின் விலையேற்றம் பற்றிய செய்திகள் மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கின்றன. இந்த விலையேற்றம் வெறும் பால் பாக்கெட்களோடு நிற்கப் போவதில்லை… அடுத்ததாக தெருவிற்கு நான்கைந்தை கடைப் போட்டிருக்கும் டீக்கடைக்காரர்கள் விலையேற்றுவார்கள். அதன் பிறகு நெய், வெண்ணெய், தயிர் என்று விலையேற்றுவார்கள். சுத்தமான பாலில் செய்கிறதைப் போல இனிப்புகளையும் விலையேற்றுவார்கள்.

பாக்கெட்  பால் குடிக்கிறதுல இத்தனை ஆபத்துக்களா… மக்களே உஷா….ர்!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பாக்கெட் பாலின் விலையேற்றம் பற்றிய செய்திகள் மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கின்றன. இந்த விலையேற்றம் வெறும் பால் பாக்கெட்களோடு நிற்கப் போவதில்லை… அடுத்ததாக தெருவிற்கு நான்கைந்தை கடைப் போட்டிருக்கும் டீக்கடைக்காரர்கள் விலையேற்றுவார்கள். அதன் பிறகு நெய், வெண்ணெய், தயிர் என்று விலையேற்றுவார்கள். சுத்தமான பாலில் செய்கிறதைப் போல இனிப்புகளையும் விலையேற்றுவார்கள். பால் சார்ந்த அத்தனைப் பொருட்களின் விலைகளிலும் இந்த விலையேற்றத்தின் தாக்கம் இருக்கும். 

ஆனால், நாம் பயன்படுத்தும் பாக்கெட் பால் உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா என்கிற கேள்வி மக்களின் மனதில் எழுவதேயில்லை. உங்கள் குழந்தைகளின், குடும்பத்தார்களின் ஆரோக்கியத்தின் மேல் உங்களுக்கு நிஜமாகவே அக்கறையிருக்கிறதா… அப்படியானால் இனி பாக்கெட் பாலை சுத்தமாக பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். மிகப் பெரிய சந்தையான பாக்கெட் பால் விற்பனை, கொடி கட்டிப் பறப்பது நம் தமிழகத்தில் தான். அதே போல் அதிகளவில் கலப்படங்கள் நிகழ்வதும் பாக்கெட் பாலில் தான். மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் மாட்டில் இருந்து கறந்த பாலை அருந்துவதுதான் சிறந்தது என்றும், பாக்கெட் பால் அருந்துவதால் ஒரு நன்மையும் இல்லை என்கிறார்கள். அப்படி கெமிக்கல்களின் கலவையான பாக்கெட் பாலைத் தான் நாம் வாங்கி,  நீண்ட நாள்கள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம். 

தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் பயன்படுத்தி என்றைக்கு நாம் பாலைப் பதப்படுத்த ஆரம்பித்தோமோ அன்றே அதற்குள் மிகப் பெரிய வணிகம் நுழைந்து விட்டது. மாட்டில் இருந்து கறக்கப்பட்ட பால் 3 அல்லது 4 மணிநேரத்தில் கெட்டு விடும். மூன்று மணிநேரம் வரை பால் கெடாமல் இருப்பதற்கான பொருளும் இயற்கையிலேயே பாலில் கலந்து இருக்கிறது. ஆரம்ப காலங்களில் பால் கலப்படம் என்றால், பாலில் தண்ணீர் கலப்பதைத்தான் சொல்வார்கள். தண்ணீர் கலந்தால் பரவாயில்லை.. பாலின் தரம் மட்டும் தான் கெடுகிறது. கெமிக்கல்களைக் கலப்பதால் நம் ஆரோக்கியமும் கெடுகிறது.  பால் சீக்கிரம் கெட்டுப் போகிறது என்பதற்காக, பாலின் அமிலத் தன்மை நீக்க காரத் தன்மை உள்ள நியூட்ரலைசர்களைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும், பாலில் யூரியா கலப்பது, காஸ்டிக் சோடா கலப்பது என்று கலப்படம் செய்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்த போது, ஒட்டு மொத்த இந்தியாவில் 68 சதவிகிதப் பால் கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது. 

காய்கறிகள், கீரைகளில் இருக்கும் சத்துகளை விட பாலில் அதிகச் சத்துகள் இல்லை.  பாக்கெட் பாலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது. பாதிக்கும் மேல் கெமிக்கல்கள் தான் இருக்கிறது. ஓர் உயிரினத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பாக்கெட் பாலில் புரோட்டின், கொழுப்பு போதுமான அளவுக்கு இருப்பதில்லை. பாக்கெட் பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கின்றனர். பாலில் அதிகளவு இருக்கும் சத்துகளைச் செயற்கையாகக் குறைக்கவும் கூடாது. ஆனால், தொழிற்சாலையில் பாலில் அதிகமாக இருக்கும் சத்துகளைக் குறைக்கின்றனர். பதப்படுத்துகிறோம் என்ற பெயரில் செய்யப்படுபவை எல்லாமே இயற்கைக்கு விரோதமானதுதான். அப்படிச் செய்வதால் பாலின் இயல்புத் தன்மை குறைந்து விடும். கேடு விளைவிக்கக் கூடிய நஞ்சாக பால் மாறி விடும்.

பால் திக்காக இருப்பதற்காக ஸ்டார்ச்சு, மைதா மாவு,  டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்றவையும்  சேர்க்கப்படுகின்றது. பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அதற்கு அமோனியா யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது. இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால் வயிற்றுப்போக்கு,  ப்ரெசர், சர்க்கரை நோய், ஹார்மோன் சீர்கேடு, பாலியல் கோளாறுகள், சிறு வயதிலே பருவமடைதல், ரத்த சோகை, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

அப்போ,  நாம் நம்பிக்கையாக பயன்படுத்தும் ஆவின் பால்? ஆம்… ஆவின் பாலிலும் கூட கிட்டத்தட்ட நாலரை சதவிகிதம் கலப்படம் இருக்கிறது. அதாவது 95 சொச்சம் சதவிகிதம் தான் சுத்தம். இத்தனைக்கும் வாங்கும் பாலைத், தரம் பிரித்து வாங்குவதாக, ஆவின் நிர்வாகம் மார்தட்டிக் கொள்கிறது. சரி என்னதான் நடக்கிறது. கறந்த பால் ஆவினுக்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருக்கும் கொழுப்புச் சத்து நீக்கப்படுகிறது. அமுல், ஆவின் போன்ற பெரிய பொதுத்துறை பால் நிறுவனங்களில் பதனப்படுத்தும்போது கொழுப்பின் அளவைக் குறைக்க வெண்ணெய் எடுத்த பாலை மாவாக்கி, அந்தப் பால் பவுடர் சேர்த்துத் தரப்படுத்தப் படுவதுண்டு. டோன்ட் மில்க் என்று வழங்கப்படும் அந்த வகைப் பால் அனுமதிக்கப்படுகிறது. அதில் புரதச்சத்து இருக்கும். இது மட்டுமே அனுமதிக்கப்பட்ட கலப்படம். 

சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயம் வழங்கிய விதிமுறைப்படி பால் கலப்பட தேசிய ஆய்வு தில்லியைச் சுற்றியும் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் பால் சாம்பிள் வாங்கிப் பரிசோதித்த போது பல்வேறு கலப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2,000 சாம்பிள்களில் சோதனை நடந்தது. அவற்றில் 30 சதவீதம் மட்டுமே நிஜமான பால் என்றும் 70 சதவீதம் கலப்படப் பால் என்றும் நிரூபணம் ஆயின. இந்த 70 சதவீதக் கலப்படம் என்பது மேலே விவரித்தபடி பாலின் கெட்டித் தன்மைக்காக மாவுப் பொருள்கள் (மைதா, ஸ்டார்ச்சு பவுடர்) கெடாமல் இருக்க டிடர்ஜண்டுடன் யூரியா முதலியன கலப்படப் பொருளாகப் பயன்படுத்துவது என்று தெரியவந்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சியான செய்தி, சுத்தமான பாலுடன் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பால் பவுடரும் கலக்கப்படுவது தான். கெட்டித் தன்மைக்கு இன்னொன்றும் செய்கிறார்கள். அதைக் கேட்டாலே மனம் அதிருது! டிடர்ஜண்ட் பவுடர்! பால் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா? சுத்தமான கறந்த பால் வெள்ளையாக இருக்காது. ஆகவே, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாக்கட் பாலை வாங்க வேண்டாம். 

பாலில் உள்ள கலப்படத்தை நாமே வீடுகளில் சிறிய சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும். அப்போது தான் ஓடிய பாதையில் தனது வெண்மை நிறத்தை கோடாக விட்டுச் சென்றால் அந்த பால் சுத்தமான தண்ணீர் கலக்காத பாலாகும். அவ்வாறில்லாமல் தனது பாதையில் வேகமாக ஓடி வெண்மை கோட்டை விட்டுச் செல்லாத பால் தண்ணீர் கலந்த கலப்படப் பாலாகும்.
சிறிதளவுப் பாலில் சில துளிகள் அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்கும்போது சிவப்பு லிட்மஸ் தாள் நீலநிறத்திற்கு மாறினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பால்.