பாகுபலி வசூலிக்கும்போது தர்பாரால் வசூலிக்க முடியாதா? – டி.ராஜேந்தர் கேள்வி!

 

பாகுபலி வசூலிக்கும்போது தர்பாரால் வசூலிக்க முடியாதா? – டி.ராஜேந்தர் கேள்வி!

தர்பார் பட டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக டி.ராஜேந்தரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்பார் பட டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக டி.ராஜேந்தரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதன் பிறகு அவர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தர்பார் படத்துக்கான டிக்கெட் விலை ஏற்றம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

ttn

அப்போது அவர் கூறியதாவது””இந்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது. ஆனால், கருத்துச் சொல்கிறேன். அதிலிருந்து நீங்களே பதிலை கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். பாகுபலி என்ற படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படத்தின் டிக்கெட்டை ரூ.50, 100 கொடுத்துத்தான் மக்கள் வாங்கிப் பார்த்தார்கள். யாரும் ரூ.1000க்கு எல்லாம் வாங்கவில்லை. பல கோடி வசூல் சாதனை புரிந்தது. எந்த மொழியில் படம் எடுக்கப்பட்டது என்பது முக்கியமில்லை. பிரம்மாண்டம்தான் அதற்குக் காரணம்.

ttnn

ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். அந்த இடத்துக்கு வர அவர் அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். கமல், அஜித், விஜய் என எல்லோருமே அப்படித்தான். இவர்களுடைய படத்துக்கும் மற்ற நடிகர்கள் படத்துக்கும் ஒரே டிக்கெட் விலையைக் கொடுங்கள் என்றால் மக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள். 

ttn

சென்னை – செங்கல்பட்டு ஏரியாவில் இரண்டு திரையரங்குகளில்தான் தர்பார் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குள்ளாக ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று எப்படி சொல்கின்றீர்கள். அந்த படத்தின் வியாபாரமே இன்னும் முடியவில்லை” என்றார்.