பாகுபலி பட நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை! விவரம் இதோ

 

பாகுபலி பட நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை! விவரம் இதோ

பாகுபலி பட  நடிகர் மது பிரகாஷின் மனைவி பாரதி கடந்த செவ்வாய்க் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகுபலி பட நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை! விவரம் இதோ

பாகுபலி பட  நடிகர் மது பிரகாஷின் மனைவி பாரதி கடந்த செவ்வாய்க் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகுபலி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மது பிரகாஷ். இவர் தெலுங்கில் பிரபல தொடரில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு பாரதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாரதி தனது கணவரின் குடும்பத்தாருடன் பஞ்சவடி காலணியில் வசித்து வந்துள்ளார்.

மது பிரகாஷ் ஷூட்டிங் காரணமாகத் தினமும் இரவு தாமதமாக  வந்துள்ளார். கணவரின் இந்த நடவடிக்கை பிடிக்காததால் கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . சம்பவம் நடந்த செவ்வாய் கிழமை அன்று தனது கணவரை வீட்டிற்குச் சீக்கிரமாக வர வேண்டும் என்று பாரதி கூறியுள்ளார். அப்படி இல்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார். 

ஆனால் அவர் சொல்வதை பிரகாஷ் கேட்காமல் சற்று தாமதமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் சென்று அவர் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாரதியின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.