பாகுபலி படத்திற்கு பிறகு மான்ஸ்டர் படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பியது: எஸ்.ஜே.சூர்யா பெருமிதம் 

 

 பாகுபலி படத்திற்கு பிறகு மான்ஸ்டர் படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பியது: எஸ்.ஜே.சூர்யா பெருமிதம் 

பாகுபலி படத்திற்கு பிறகு என் படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். 

சென்னை: பாகுபலி படத்திற்கு பிறகு என் படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். 

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மான்ஸ்டர். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

monster

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, ‘முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன். அனைத்து தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து படத்தை  பார்க்கிறார்கள். 

monster

ஒரு தியேட்டரில் ஓரு சிறுவன் தனியாக ரசித்து படம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது என்னைப் பார்த்து எலி மாமா என்று கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். இந்த மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதே போல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

பாகுபலிக்கு பிறகு மான்ஸ்டர் படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர். மீண்டும் இதே குழுவுடன் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.