பாகுபலிக்கு நாயகிக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணம்? சர்ப்ரைஸ் கொடுக்க ஏற்பாடு செய்யும் ரசிகர்கள்

 

பாகுபலிக்கு நாயகிக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணம்? சர்ப்ரைஸ் கொடுக்க ஏற்பாடு செய்யும் ரசிகர்கள்

அனுஸ்காவின் திருமணம் எப்போது என்று அவரது பெற்றோர்களை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகுபலி படம் வெளியான பின்பு அனுஷ்காவும் பிரபாஸும் காதலிக்கிறார்கள் என்று பல வதந்திகள் பரவின.

பாகுபலி நடிகை அனுஷ்கா ஷெட்டி, ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அனுஸ்காவின் திருமணம் எப்போது என்று அவரது பெற்றோர்களை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகுபலி படம் வெளியான பின்பு அனுஷ்காவும் பிரபாஸும் காதலிக்கிறார்கள் என்று பல வதந்திகள் பரவின. ஆனால் “நாங்கள் எப்போதும் நண்பர்கள் என்று கூறி இருவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

 

 

இப்பொது அனுஷ்கா ஷெட்டி ஒரு கிரிக்கெட் வீரரை காதலிக்கிறார்,அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றும்,அவரின் காதலர் தென்னிந்திய ரஞ்சி அணிக்காக விளையாடும் வட இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

 

 

இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று கொந்தளித்த ரசிகர்கள் அவருக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். 

அதன்படி, இன்று மாலை ஐந்து மணிக்கு #WeloveAnushkaShetty என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.எந்த அளவிற்கு இந்த ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்!.