பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்ட மாணவியைக் கொலை செய்ய ரூ.10 லட்சம்! – ஶ்ரீராம் சேனா அறிவிப்பு

 

பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்ட மாணவியைக் கொலை செய்ய ரூ.10 லட்சம்! – ஶ்ரீராம் சேனா அறிவிப்பு

பெங்களூருவில் ஓவைசி தலைமையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் மாணவி அமுல்யா பாகிஸ்தான் ஜிந்தபாத் (வாழ்க) என்று கோஷமிட்டார். அவர் ஏன் அப்படி சொல்ல வந்தார் என்று தெரியவில்லை… அவர் அடுத்து இந்தியா ஜிந்தாபாத் என்றும் கூறினார்… இதன் மூலம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை சொல் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட மாணவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் தரத் தயாராக உள்ளதாக ஶ்ரீராம் சேனா அறிவித்துள்ளது.
பெங்களூருவில் ஓவைசி தலைமையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் மாணவி அமுல்யா பாகிஸ்தான் ஜிந்தபாத் (வாழ்க) என்று கோஷமிட்டார். அவர் ஏன் அப்படி சொல்ல வந்தார் என்று தெரியவில்லை… அவர் அடுத்து இந்தியா ஜிந்தாபாத் என்றும் கூறினார்… இதன் மூலம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை சொல் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதாலேயே அவரை கொலை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு இந்து அமைப்புக்கள் கொந்தளிப்பாக உள்ளன.

amulaya.jpg

ஏற்கனவே மாணவி அமுல்யா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வீடு மர்ம நபர்களால் (???) தாக்கப்பட்டது. அவருக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இத்தனைக்கும் அந்த மாணவியின் தந்தை பா.ஜ.க-வுக்காக தேர்தல் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கர்நாடகாவின் பிரபல இந்து அமைப்பான ஶ்ரீராம் சேனா நிர்வாகி சஞ்சீவ் மராடி பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர், “அமுல்யாவை கொல்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும்” என்றார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, அந்த வீடியோவை நாங்கள் பார்க்கவில்லை என்றனர்.