பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடம் இல்லை – பிரதமர் இம்ரான்கான் தெரிவிப்பு

 

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடம் இல்லை – பிரதமர் இம்ரான்கான் தெரிவிப்பு

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் புகலிடம் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் புகலிடம் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு தலீபான், ல‌‌ஷ்கர்-இ-தொய்பா, ஜெய்‌‌ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாக இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் புகலிடம் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ttn

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ‘‘கடந்த காலத்தில் நிலைமை எவ்வாறு வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களின் புகலிடம் எதுவும் இல்லை. இப்போது எங்களுக்கு உள்ள ஒரே தேவை…ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்பதே ஆகும்’’ என்றார்.