பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது! தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்!! 

 

பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது! தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்!! 

பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர் விளையாட முடியாது என 10 இலங்கை வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர் விளையாட முடியாது என 10 இலங்கை வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடைபெற்றது. இதில் சில வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு சென்று அங்கு விளையாட எந்தவொரு நாடும் சம்மதித்தது இல்லை.. 

srilanka team

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அணி வீரர்கள், நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்து தொடரிலிருந்து விலகியுள்ளனர். லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகிய 10 வீரர்கள் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.