பாகிஸ்தானை விட இந்திய அணி படு ஸ்ட்ராங்க்- முன்னாள் கேப்டன் கபில் தேவ்

 

பாகிஸ்தானை விட இந்திய அணி படு ஸ்ட்ராங்க்- முன்னாள் கேப்டன் கபில் தேவ்

பாகிஸ்தானை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

உலகின் மிக நீளமான கிரிக்கெட் பேட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில், 6ஆயிரத்து 600 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட கிரிக்கெட் பேட்டை கபில்தேவ் அறிமுகம் செய்தார். இதனை ஆய்வு செய்து, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினர். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கபில் தேவ், தன்னை விட சிறந்த வீரராக விராட் கோலி இருப்பதாக தெரிவித்தார். தற்போது உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி சிறந்த அணியாக விளங்குவதாகவும், பாகிஸ்தான் அணியை விடவும் பலமான அணியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.