பாகிஸ்தானுக்கு 337 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

 

பாகிஸ்தானுக்கு 337 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போரில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பாக களிமிறங்கிய ரோகித் சர்மா 140 ரன்களுடனும்,  ராகுல் அரை சதத்துடனும் வெளியேறினர். விராட் கோலி 70 ரன்களுடனும் அதி தீவிரமாக விளையாடினர். அதன் பின் களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 336  ரன்களை எடுத்து பாகிஸ்தானுக்கு 337 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.