பாகிஸ்தானில் பேருந்து விபத்து; 19 பேர் பரிதாப பலி

 

பாகிஸ்தானில் பேருந்து விபத்து; 19 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேராக மோதியதில் 19 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேராக மோதியதில் 19 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் தேரா காசி கான் நகரில் முல்தான் ரோட்டில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அப்போது இரண்டு பேருந்துகளும் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து பேருந்தில் சென்றவர் அளித்த தகவலை தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ள்து.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் இரங்கல் மற்றும் வருத்தத்தினை தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.