பாகிஸ்தானின் கோர விபத்து – 22 பேர் பலி

 

பாகிஸ்தானின் கோர விபத்து – 22 பேர் பலி

பாகிஸ்தானை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 22 பேர் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 22 பேர் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஸ்கர்த்து பகுதியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைப்பகுதி வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலையில் ஏறுகையில் திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனால், வேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல், நிலைதடுமாறி மலைப்பகுதியில் இருந்த பாறை மீது மோதியது. பேருந்து வேகமாக வந்து மோதியதால் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

bus accident

இந்த விபத்தில் பயணிகள் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்றும் படுகாயம் அடைந்த 15-ற்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். 

பள்ளத்தாக்கில் விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிர் இழந்தோர்களின் சடலங்களையும், உயிருடன் இருப்பவர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து பயணிகள் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த மாதம் இதே போன்று பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது