‘பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த நபர்’.. மது போதையில் செய்த அட்டூழியம்!

 

‘பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த நபர்’.. மது போதையில் செய்த அட்டூழியம்!

அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயன்ற அந்த பெண்ணை, ஒரு நபர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 40 வயதுடைய பெண் நின்று கொண்டிருந்துள்ளார். அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயன்ற அந்த பெண்ணை, ஒரு நபர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தா பெண் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கோபத்துடன் கேட்க, மீண்டும் கன்னத்தில் அடித்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் ஏன் அடிக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் என் மனைவியை நான் அடிப்பேன் என்று கூறியுள்ளார். 

ttn

அதனைக் கேட்டு பதறிப்போன அந்த பெண், இவர் என் கணவர் இல்லை என்றும் இவர் யார் என்றே தெரியாது என்றும் கூறியுள்ளார். அச்சமயம் பார்த்து அங்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் பெயர் சின்னராஜ் என்றும் அவர் மதுபோதையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை தாக்கியது குறித்து சின்னராஜிடம் போலீசார் கேட்ட போது, என் மனைவி மாதிரி தெரிந்தார். அதனால் அடித்தேன் என்று கூறியுள்ளார். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சின்னராஜை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.