பழிக்கு பழி…பைக்கில் சென்ற அரசு ஊழியரை வெட்டிக்கொன்ற 7 பேர்!

 

பழிக்கு பழி…பைக்கில் சென்ற அரசு ஊழியரை  வெட்டிக்கொன்ற 7 பேர்!

திடீரென ஓடிவந்த 7 பேர் கொண்ட கும்பல் லோகநாதனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி சென்றனர். 

புதுச்சேரி குருசுகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன். 50 வயதான இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் மீன் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் குருசுகுப்பம் மாதா கோயில் அருகே வந்த போது  திடீரென ஓடிவந்த 7 பேர் கொண்ட கும்பல் லோகநாதனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி சென்றனர். 

ttn

இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆம்புலன்ஸ் டிரைவர் மாறன் கொலைக்கு பழிக்குப் பழியாக மாறன் மகன்கள் கோகுல், ராகுல், சூர்யா மற்றும் சதீஷ், வினோத் மற்றும்  2 சிறுவர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்து லோகநாதனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

ttn

தற்போது லோகநாதனை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.