பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்

 

பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி அவருக்கு வயது 87 உள்ள நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 

சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி அவருக்கு வயது 87 உள்ள நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை சீதாலட்சுமி. இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்திருந்தார். குறிப்பாக எங்கவீட்டுப் பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை போன்ற 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். 

seetha

பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்துக்கு வந்தபின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு கலைமாமணி, தந்தை பெரியார் விருதுகளையும் பெற்றுள்ளார். 

seetha

இந்நிலையில், நடிகை சீதாலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் தற்போது சென்னை நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

seetha

மேலும் அவன் இவன், பரதேசி போன்ற திரைப்படத்தின் நடன இயக்குநராக பணிபுரிந்த ராதிகா இவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.