பழசோ, புதுசோ இயக்குநர்கள் முக்கியமில்லை ! கதைதான் முக்கியம் ! அக்ஷய்குமார் உருக்கம் !

 

பழசோ, புதுசோ இயக்குநர்கள் முக்கியமில்லை ! கதைதான் முக்கியம் ! அக்ஷய்குமார் உருக்கம் !

பெரிய இயக்குநர்களை தன்னை ஒதுக்குவதாலேயே, அறிமுக இயக்குநர்களிடம் பணிபுரிவதாக இந்தி திரையுலக நட்சத்திரம் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரஉள்ள குட்நியூஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பேசியபோது, பெரிய இயக்குநர்கள் அவர்களுடைய படங்களுக்கு தன்னை தேர்வு செய்யாததால்தான், அறிமுகம் மற்றும் புதிய இயக்குநர்களிடம் பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பெரிய இயக்குநர்களை தன்னை ஒதுக்குவதாலேயே, அறிமுக இயக்குநர்களிடம் பணிபுரிவதாக இந்தி திரையுலக நட்சத்திரம் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரஉள்ள குட்நியூஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பேசியபோது, பெரிய இயக்குநர்கள் அவர்களுடைய படங்களுக்கு தன்னை தேர்வு செய்யாததால்தான், அறிமுகம் மற்றும் புதிய இயக்குநர்களிடம் பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

akshay kumar

பெரிய இயக்குநர்கள் அழைக்காவிட்டால், புதிய இயக்குநர்களிடம் செல்லவேண்டுமோ என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பெரிய நிறுவனத்தில் வேலையை இழக்கும்போது சிறிய நிறுவனங்களை நாடி செல்வதில்லையா அதுபோலத்தான் என்றார். சினிமாவில் இயக்குநரகள் கான்கள், கபூர்கள் என பார்ப்பதில்லை. திறமை இருப்பவர்களிடம் மட்டுமே பணிபுரிகிறார்கள். எனக்குத் தகுதியில்லை என எண்ணிக்கொள்வதால் எனக்கான வழியை நானே தேடிக்கொள்கிறேன். அதே சமயம் பெரிய இயக்குநர்கள் படங்களைத் தயாரிக்கும்போது மட்டும் என்னை அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் இயக்கும் படங்களுக்கு என்னைத் தேர்வு செய்வதில்லை என வெளிப்படையாக பேசினார். புதிய இயக்குநர்களுக்கு நான் எதுவும் சொல்லித் தருவதில்லை. அவர்கள் பாட்டுக்கு வந்து அவர்கள் வேலையைச் செய்வார்கள்.

akshay kumar

கதை, திரைக்கதையை அதிகம் நான் நம்புவேன். அதிலேயே 60 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிடும். குட் நியுஸ் படம், டிசம்பர் 27 அன்று வெளிவரவுள்ளது. கரீனா கபூர், தில்ஜித், கியாரா அத்வானி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
திடிரென வந்த அம்னிஷியா நோய் போல அக்ஷய் குமார் யார் என்று உங்களுக்கு மறந்திருக்கும். இருந்தாலும், நினைவுபடுத்துகிறோம். தமிழில் விஜய் நடித்த துப்பாக்கி, ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, ரஜினிகாந்த் நடித்த 2.0 படங்களில் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார்.