பழங்குடி பெண்ணை பலாத்காரம் செய்து அரைநிர்வாணமாக இழுத்து சென்ற கொடூரம்: அதிர வைக்கும் காரணம்!

 

பழங்குடி பெண்ணை பலாத்காரம் செய்து அரைநிர்வாணமாக இழுத்து சென்ற கொடூரம்: அதிர வைக்கும் காரணம்!

பெண்ணின் கணவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட அப்பெண் தனியாக வசித்து வந்துள்ளார்.

சிதி: பாலியல் வன்கொடுமை செய்து பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்  30 வயது பழங்குடியினப் பெண். அப்பெண்ணின் கணவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட அப்பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு அப்பெண்ணின்  வீட்டிற்குள் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அரை நிர்வாணமாக அந்த பெண்ணை இழுத்து சென்றதாகக் கூறப்படுகிறது.

 

சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரரின் பெற்றோர் அந்த பெண்ணை மீட்டு  அவருக்கு உடை கொடுத்து மகனிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து மறுநாள் காலை அப்பெண் உறவினர்களிடம் கூற அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 

இந்நிலையில்  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த நபரை கைது செய்தனர். இதுபற்றி போலீசாரிடம் கூறிய அந்த நபர், எனக்கு பில்லி சூனியம் வைத்ததாகச் சந்தேகம் இருந்ததால், அப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.