பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞரை கட்டிவைத்து உதைத்த கிராம மக்கள்!

 

பள்ளி மாணவியை கேலி செய்த இளைஞரை கட்டிவைத்து உதைத்த கிராம மக்கள்!

ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கேலி கிண்டல் செய்ததாக  இளைஞரை கல் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த  3 பேரை சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

crime

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மோதகபள்ளி பகுதியை சேர்ந்த பரத்வருமா என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவரின் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கேலி கிண்டல் செய்ததாக  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் தந்தை  சிவமூர்த்தி அந்த பையனின் கிராமத்திற்கு சென்று அந்த பையனை அழைத்து சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும், அந்த இளைஞரை கல் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் தந்தை சிவமூர்த்தி, கோவிந்தசாமி, குமார் ஆகியோரை சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.